பெருங்காளமேகம் பிளாய்

அதிமதுரகவி அஹங்காரத்துடன் காளமேகப்புலவரை நோக்கி, "நான் யார் தெரியுமா? மூச்சு விடும் நேரத்தில் முன்னூறு நானூறு பாடல்களையும், ஆச்சென்று தும்மல் போடும் நேரத்தில் ஐநூறு பாடல்களையும் புனைந்து கூறும் வல்லமை படைத்த அதிமதுரகாவி நான்" என்ற பொருள்பட,

மூச்கசுவிடு முன்னே முன்னூறு நானூறும்
ஆச்சென்றா லைந்நூறு மாகாவோ - பேச்சென்ன
வெள்ளைக் கவிகாள மேகமே உன்னுடைய
கள்ளக் கவிக் கடையைக் கட்டு

எனும் பாடலைக் கூறினார். வெள்ளைக் கவி என்றால் வெண்பா பாடும் புலவர் என்று பொருள்.

இதற்கு மறுமொழியாகக் காளமேகம், "இம்மென்று குரலெழுப்பும் நேரத்தில் எழுநூறு, எண்ணூறு பாடல்களையும், அம்மென்று வாயை மூடுவதற்குள் ஆயிரம் பாடல்களையும் புனைந்து கூறும் வல்லமை பெற்ற காளமேகம் நான். என் முன்னர் நீ ஒரு சிறு பிள்ளை" எனும் பொருள்பட

இம்மென்னு முன்னே எழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாவோ - சும்மா
யிருந்தா லிருப்பே னெழுந்தேனே யாகிற்
பெருங்காள மேகம் பிளாய்.

என முழங்கினார்.

Labels:

1 Comments:

Blogger Elangovan said...

This comment has been removed by the author.

6:40 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home